Wednesday, August 29, 2012

நதிக்கரையோரம் அமைதியானதொரு இரவு!

நதிக்கரையோரம் அமைதியானதொரு இரவு!
நம்மையும் நதியையும் தவிர
எவருமில்லையென எண்ணியே

நடந்து கொண்டிருந்தோம்...

படித்துறையில் மெல்லிய அலைகள்!
வளைந்த நாணல் புதர்களிடையே 

இரு அன்னப்பறவைகள் கழுத்துகள் உரச
உறங்கிகொண்டிருப்பதை கண்டோம்...


பூனைப்பாதம் எடுத்து வைத்து
விரைந்து அவ்விடத்தைக் கடந்தோம்...

திரும்பி நாம் பார்க்கையில்
நதியில் விழுந்த நிலவின்
பிம்பம் கூட அப்பறவைகளைச் சுற்றியபடி
மிதந்து சென்றததாய் தோன்றியது நமக்கு..

புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டோம்..
முன்பை விட அழகானது அந்த இரவு!

No comments: