கறிக்கடை வாயிலில் வாலாட்டி வயிறு நிறைத்து
ஏடிஎம் அறைகளில் படுத்துறங்கி வாழும் நாய்கள்.
நகரத்தின் மையத்திலிருக்கும் பூங்காவில் சிறிதும் பயமின்றி
மக்களின் கைகளிலிருந்து வேர்க்கடலை கொறிக்கும் அணில்கள்.
...
நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் சக்கரங்களிடையே
லாவகமாய் குதித்து இரை தேடும் ஆரஞ்சுக்கண் மைனாக்கள்.
இருபக்கமும் விரிந்திருக்கும் தெருவிளக்குக் கம்பங்களின் உச்சியில்
கூடு கட்டி குஞ்சு பொறித்து சுகமாய் வாழ்ந்திடும் காகங்கள்.
குப்பைதொட்டிகளில் குவிந்து கிடக்கும் லேஸ் சிப்ஸ்
உறைகளுக்குள் பிறக்கித் தின்று உடல்வளர்க்கும் சுண்டெலிகள்.
கோவில்களில் அபிசேகிக்கப் படுகிற பாலைக் குடித்து
தேங்காய்ப் பத்தையும் தின்னப் பழகிக்கொண்ட பூனைகள்.
ஏசி பெட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்து வீட்டு பால்கனிகளில் ஓடி
விளையாடுகின்றன கோபுரங்களில் தங்கிப்பழகிய மணிப்புறாக்கள்.
ம்ம்ம்ம்..மனிதன் மட்டுமில்லை, விலங்குகளும் பறவைகளும் கூட
இந்த பெருநகரத்தின் சூழலுக்கு ஒத்துப்போக கற்றுத்தான் கொண்டன!!!
ஏடிஎம் அறைகளில் படுத்துறங்கி வாழும் நாய்கள்.
நகரத்தின் மையத்திலிருக்கும் பூங்காவில் சிறிதும் பயமின்றி
மக்களின் கைகளிலிருந்து வேர்க்கடலை கொறிக்கும் அணில்கள்.
...
நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் சக்கரங்களிடையே
லாவகமாய் குதித்து இரை தேடும் ஆரஞ்சுக்கண் மைனாக்கள்.
இருபக்கமும் விரிந்திருக்கும் தெருவிளக்குக் கம்பங்களின் உச்சியில்
கூடு கட்டி குஞ்சு பொறித்து சுகமாய் வாழ்ந்திடும் காகங்கள்.
குப்பைதொட்டிகளில் குவிந்து கிடக்கும் லேஸ் சிப்ஸ்
உறைகளுக்குள் பிறக்கித் தின்று உடல்வளர்க்கும் சுண்டெலிகள்.
கோவில்களில் அபிசேகிக்கப் படுகிற பாலைக் குடித்து
தேங்காய்ப் பத்தையும் தின்னப் பழகிக்கொண்ட பூனைகள்.
ஏசி பெட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்து வீட்டு பால்கனிகளில் ஓடி
விளையாடுகின்றன கோபுரங்களில் தங்கிப்பழகிய மணிப்புறாக்கள்.
ம்ம்ம்ம்..மனிதன் மட்டுமில்லை, விலங்குகளும் பறவைகளும் கூட
இந்த பெருநகரத்தின் சூழலுக்கு ஒத்துப்போக கற்றுத்தான் கொண்டன!!!
No comments:
Post a Comment