கூழாங்கல்
அலுவலகத்திலின்று வீடு திரும்பி கதவு திறந்ததும்
சில்லென்று முகத்தில் அறைந்தது குளிர் தென்றல்.
ஒரு சில துளிகளும் தெறித்தாற் போலவே தோன்றியது!
திடுக்கிட்டாலும் மெல்ல நடந்து இருக்கையில் சரிகையில்
... தளப் தளப் என்று சிற்றலைகள் கரையினில் மோதும் சப்தங்களும்.
அடுத்து மரக்கிளையொன்று சரக்கென முறிந்து
தொமீரென நீரில் விழும் ஓசையும் தொடர்ந்தது!
மருண்ட கண்களுடன் பார்வையைச் சுழற்றிய
என் கண்களில் பட்டது மேசையில் அமர்ந்திருந்த
கூழாங்கல்!
நதியிலிருந்து என்னைப் பிரித்து எடுத்து வந்தாயே!
மனிதரென்று நினைத்தாயா என்னை..
பிறந்த மண்ணையும், இயல்பையும் மறப்பதற்கு?
நீ உணர்ந்தது அனைத்தும் என் நினைவலைகள் என்றது!!!
No comments:
Post a Comment