என் பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டுகையில், நழுவி கையில் விழுந்தது ஒரு புதையல்! நான் சிறுவயதில் தண்ணீர் ஊற்றிப் பேணி வளர்த்த செம்பருத்திச் செடியின் முதல் பூ.. கருஞ்சாந்து நிறத்தில் மெல்லிய நரம்புகளோடி, ஒரு வண்ணத்துபூச்சியின் சிறகைப்போல் மென்மையானதாக வருடங்கள் கடந்தும் உயிர்ப்பையும் வசீகரத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தது. பச்சிளங்குழந்தையை தரையில் கிடத்துவது போலே கவனமாக மீண்டும் உள்ளே வைத்து மூடினேன்!

எனக்கும் மலர்களுக்கும் இடையிலான சிநேகம் பற்றிய நினைவுகள் மெல்ல மனத்துள் கவியத் தொடங்கின. அம்மா பூஜை முடித்து கருகிய கதம்ப மாலைகளைப் போட்டு வைக்கும் கொல்லைப்புரத் தோட்டத்து மண்ணில் செழித்து வளர்ந்து சில்லென்று பூக்கின்ற வாடாமல்லி, வெள்ளை சாமந்திகளைச சுற்றி துளிர்க்கும் மரிக்கொழுந்து, துளசிச்செடிகள்.
தினந்தோறும் அக்காவின் தொட்டியில் மட்டும் அதிக மலர்கள் பூத்திருக்கிறதென்று அழும் குட்டித் தங்கையைத் தேற்ற இரவோடிரவாக அவளது தொட்டியில் நான் நட்டு வைக்கும் மஞ்சளும், சிவப்புமாய் மனதை அள்ளும் பட்டன் ரோஜாக்கள். வகுப்பறைத்தோழியின் வீட்டில் வெள்ளை, சிவப்பு கலந்த கலப்பினம் இருக்கிறதென்று கேள்விப்பட்டு பள்ளி முடிந்ததும் ஓடிச்சென்று மண்ணுடன் பறித்து வந்து பதியனிட்ட காட்டு ரோஜாக்கள்!
பக்கத்து வீட்டில் சுற்றுச்சுவர் தாண்டி வளர்ந்து நிற்கும் மகிழ மரம் பாதையில் தாராளமாய் மலர்கள் உதிர்க்கும். வாசனைக்கு மயங்கி பாம்பு இருக்குமென்று பயந்து ஓட்டமாய் ஓடி சேகரிக்கும் சந்தன நிற மகிழம்பூக்கள். மழைக்காலங்களில் ஆங்காங்கே வெண்பொட்டுக்களாய் ஒளிரும் தும்பைப்பூகள்.

பாட்டி வீட்டின் முற்றத்தில் துவங்கி, சுவற்றில் தொற்றி, மொட்டைமாடி வரை வளர்ந்திருக்கும் ஆஜானுபாகுவான முல்லைக்கொடி சொரியும் வெள்ளிக்கம்பி முல்லைகள். இரவு நேர தென்றல் மொத்தத்தையும் மணக்க வைக்கும், காலையில் பின்னலிட்டு வைத்துக்கொள்ளவென அம்மா ஈரத்துணியில் சுற்றி வைக்கும் நெருக்கிக்கட்டிய பிச்சிப்பூக்கள்.
கிளி விரட்டவென்று விடிகாலையில் எழுந்து காட்டுக்குப் போகையில், வந்த வேலை மறந்து வேடிக்கை பார்க்க வைக்கும் பஞ்சவர்ணக்கிளிகளுக்கு உண்டு களிக்க விதைகள் தரும் பிரகாசமான சூரியகாந்திகள்.
அத்தை வீட்டில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மஞ்சள் கனகாம்பரம். மார்கழி மாதத்தில் வண்ண வண்ணமாய் மலர்கின்ற ரோஸ், நீல, வெள்ளை டிசம்பர் பூக்கள். பள்ளிகூடத்துக் சுவரெங்கும் படரும் நீல நிறத்தில் நடுவில் வெள்ளையாய் சுழிந்திருக்கும் சங்கு புஷ்பங்கள்.
சித்தியின் வளைகாப்புக்கு சடையில் வைத்துத் தைத்த, தெருவை அள்ளும் நறுமணம் கொண்ட தாழம்பூ மடல்கள். வாடவே வாடாதாம் என்று அதிசயித்து காகிகதப்பூ என்று நாங்கள் செல்லமாய் அழைக்கும் போகன்வில்லா மலர்கள்.
அம்மனுக்கு சாத்திய மாலை என்று அப்பா வீட்டுக்கு கொண்டு வந்திருந்த மாலையில் அடுக்கடுக்காய்க் கோர்த்திருந்த சம்பங்கி பூக்களுடன், பாந்தமாய் பொருந்தியிருந்த செந்நிற சேவற்கொண்டை மலர்கள்.
பச்சைப்பசேலென்று மொட்டில் ஒரு வடிவமாகவும், பூவில் ஒரு வடிவமாகவும் சொலிக்கும் கருவேலம்பூ. அதிகாலை தோட்டத்தில் நின்றால், கருநிற வானத்தில் வாரியிறைத்திருக்கும் ஒளி விடும் நட்சரத்திரங்களை நினைவுபடுத்தும் மல்லிகை.
ஆற்றங்கரை பிள்ளையாருக்கு மாலை கட்டி போடவென கைகளில் பால் படாமல் பிளாஸ்டிக் பைகளை சுற்றிக்கொண்டு கவனமாய் சேகரித்த எருக்கம்பூக்கள். சிவன் கோவில் தெப்பகுளத்தில் நீர்ப்பரப்பே தெரியாமல் மறைத்திருக்கும் செந்தாமரைகள், அவற்றின் நடுவே திடீர் திடீரென தலை நீட்டும் அல்லி மொட்டுக்கள்.
ஊட்டி மலர் கண்காட்சியில் பார்த்து வியந்த சூரியாகாந்தியின் தூரத்து சொந்தங்களான டேலியாக்கள். சிவப்புதான் அழகென்றும், மஞ்சள்தான் அழகென்றும் நண்பனும் நானும் அடிக்கடி சண்டையிடும் அரளிப்பூக்கள்.
வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு காணக் கிடைப்பது பொக்கே ஷாப்பில் இலைகள் கத்தரிக்கப்பட்டு விற்கப்படும் ரோஜா மொட்டுகளும், வண்ணம் தீட்டப்பட்ட ஆர்கிட் மலர்களுமே என்றெண்ணுகையில் கண்ணெல்லாம் நீர் நிறைத்துக் கொள்கிறது!!!

எனக்கும் மலர்களுக்கும் இடையிலான சிநேகம் பற்றிய நினைவுகள் மெல்ல மனத்துள் கவியத் தொடங்கின. அம்மா பூஜை முடித்து கருகிய கதம்ப மாலைகளைப் போட்டு வைக்கும் கொல்லைப்புரத் தோட்டத்து மண்ணில் செழித்து வளர்ந்து சில்லென்று பூக்கின்ற வாடாமல்லி, வெள்ளை சாமந்திகளைச சுற்றி துளிர்க்கும் மரிக்கொழுந்து, துளசிச்செடிகள்.
தினந்தோறும் அக்காவின் தொட்டியில் மட்டும் அதிக மலர்கள் பூத்திருக்கிறதென்று அழும் குட்டித் தங்கையைத் தேற்ற இரவோடிரவாக அவளது தொட்டியில் நான் நட்டு வைக்கும் மஞ்சளும், சிவப்புமாய் மனதை அள்ளும் பட்டன் ரோஜாக்கள். வகுப்பறைத்தோழியின் வீட்டில் வெள்ளை, சிவப்பு கலந்த கலப்பினம் இருக்கிறதென்று கேள்விப்பட்டு பள்ளி முடிந்ததும் ஓடிச்சென்று மண்ணுடன் பறித்து வந்து பதியனிட்ட காட்டு ரோஜாக்கள்!
பக்கத்து வீட்டில் சுற்றுச்சுவர் தாண்டி வளர்ந்து நிற்கும் மகிழ மரம் பாதையில் தாராளமாய் மலர்கள் உதிர்க்கும். வாசனைக்கு மயங்கி பாம்பு இருக்குமென்று பயந்து ஓட்டமாய் ஓடி சேகரிக்கும் சந்தன நிற மகிழம்பூக்கள். மழைக்காலங்களில் ஆங்காங்கே வெண்பொட்டுக்களாய் ஒளிரும் தும்பைப்பூகள்.

பாட்டி வீட்டின் முற்றத்தில் துவங்கி, சுவற்றில் தொற்றி, மொட்டைமாடி வரை வளர்ந்திருக்கும் ஆஜானுபாகுவான முல்லைக்கொடி சொரியும் வெள்ளிக்கம்பி முல்லைகள். இரவு நேர தென்றல் மொத்தத்தையும் மணக்க வைக்கும், காலையில் பின்னலிட்டு வைத்துக்கொள்ளவென அம்மா ஈரத்துணியில் சுற்றி வைக்கும் நெருக்கிக்கட்டிய பிச்சிப்பூக்கள்.
கிளி விரட்டவென்று விடிகாலையில் எழுந்து காட்டுக்குப் போகையில், வந்த வேலை மறந்து வேடிக்கை பார்க்க வைக்கும் பஞ்சவர்ணக்கிளிகளுக்கு உண்டு களிக்க விதைகள் தரும் பிரகாசமான சூரியகாந்திகள்.
அத்தை வீட்டில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மஞ்சள் கனகாம்பரம். மார்கழி மாதத்தில் வண்ண வண்ணமாய் மலர்கின்ற ரோஸ், நீல, வெள்ளை டிசம்பர் பூக்கள். பள்ளிகூடத்துக் சுவரெங்கும் படரும் நீல நிறத்தில் நடுவில் வெள்ளையாய் சுழிந்திருக்கும் சங்கு புஷ்பங்கள்.
சித்தியின் வளைகாப்புக்கு சடையில் வைத்துத் தைத்த, தெருவை அள்ளும் நறுமணம் கொண்ட தாழம்பூ மடல்கள். வாடவே வாடாதாம் என்று அதிசயித்து காகிகதப்பூ என்று நாங்கள் செல்லமாய் அழைக்கும் போகன்வில்லா மலர்கள்.
அம்மனுக்கு சாத்திய மாலை என்று அப்பா வீட்டுக்கு கொண்டு வந்திருந்த மாலையில் அடுக்கடுக்காய்க் கோர்த்திருந்த சம்பங்கி பூக்களுடன், பாந்தமாய் பொருந்தியிருந்த செந்நிற சேவற்கொண்டை மலர்கள்.
பச்சைப்பசேலென்று மொட்டில் ஒரு வடிவமாகவும், பூவில் ஒரு வடிவமாகவும் சொலிக்கும் கருவேலம்பூ. அதிகாலை தோட்டத்தில் நின்றால், கருநிற வானத்தில் வாரியிறைத்திருக்கும் ஒளி விடும் நட்சரத்திரங்களை நினைவுபடுத்தும் மல்லிகை.
ஆற்றங்கரை பிள்ளையாருக்கு மாலை கட்டி போடவென கைகளில் பால் படாமல் பிளாஸ்டிக் பைகளை சுற்றிக்கொண்டு கவனமாய் சேகரித்த எருக்கம்பூக்கள். சிவன் கோவில் தெப்பகுளத்தில் நீர்ப்பரப்பே தெரியாமல் மறைத்திருக்கும் செந்தாமரைகள், அவற்றின் நடுவே திடீர் திடீரென தலை நீட்டும் அல்லி மொட்டுக்கள்.
ஊட்டி மலர் கண்காட்சியில் பார்த்து வியந்த சூரியாகாந்தியின் தூரத்து சொந்தங்களான டேலியாக்கள். சிவப்புதான் அழகென்றும், மஞ்சள்தான் அழகென்றும் நண்பனும் நானும் அடிக்கடி சண்டையிடும் அரளிப்பூக்கள்.
வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு காணக் கிடைப்பது பொக்கே ஷாப்பில் இலைகள் கத்தரிக்கப்பட்டு விற்கப்படும் ரோஜா மொட்டுகளும், வண்ணம் தீட்டப்பட்ட ஆர்கிட் மலர்களுமே என்றெண்ணுகையில் கண்ணெல்லாம் நீர் நிறைத்துக் கொள்கிறது!!!
2 comments:
தேவதைப் பெண்ணே,
மற்றுமொரு அருமையான கவிதை. சிறுதும்பைப் பூவில் தேன் இருக்குமென்று, அதைப் பறிக்க, முள் கீறி விரல்களால் பிடிக்க முடியாமல் கீழே விழுந்தது போக மீதமுள்ள பூக்களை பக்குவமாய்ப் பிடித்து, அதன் காம்பிலிருந்து தேன் சுவைத்த நாட்கள் இனி வருமா? தலையில் பூச்சூடிய பெண்களை பார்த்தே எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது!. கடல் கடந்து பூமியின் மறுபக்கம் உள்ள எம் நாட்டிற்கு வந்தாலும் கூட தேட வேண்டி இருக்கிறதே!! என்ன செய்வது! இது வெள்ளைக் காரனின் வர்த்தக பார்பனீயத்தின் விளைவு. தவிச்ச வாய்க்குக் கிடைக்கும் தண்ணீர் கூட புட்டியில் காசுக்கு விற்கப் படுகிறதே!
கண்ணெல்லாம் நீர் நிறைத்துக் கொள்ளத்தான் செய்கிறது!!!
உண்மைதான் நண்பா.. நினைவுகளையாவது நம் அடுத்த தலைமுறைக்கு அளிப்பதற்கு சேமிப்போம்!!
Post a Comment