Monday, October 22, 2012

அம்மா ..

அம்மா ..

பசி என்ற சொல்லே அறியாமல் வளர்த்தாய்

பார்த்து பார்த்துச் சமைத்துப் பரிமாறுவாய்


பிணி எனில் நொடியும் கண்ணுறங்க மாட்டாய்
பீலியேயாயினும் வலிக்குமென்று பதறுவாய்

புன்னகையாலே வேதனை மறக்க செய்வாய்

பூவால் அடிப்பது போல் எங்களை திட்டுவாய்

பெண் பிள்ளையென்னை பதவிசாய் ஆளாக்கினாய்

பேதை நானென விளையாட்டாய் எள்ளிச் சிரிப்பாய்

பொட்டு வைக்க கூட தெரியவில்லை உனக்கென்று போதுமென்னும் அளவுக்கு அலங்கரிபபாய்

பௌ பௌ எனும் நாயிடம் கூட அன்பையே பொழிவாய்

அஃதொரு அமிர்தவர்ஷிணி நீ..அம்மா..நினக்கு நிகர் நீயே!!

No comments: